Header Ads



நிபந்தனையை மீறிய அரசியல்வாதி, மீண்டும் சிறையிலடைப்பு

பிணைமுறி நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த மற்றும் அவரது சகோதரர்களால் முன்வைக்கப்பட்ட பிணைகோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை இன்றைய தினம் சிலாபம் மேல்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் செயலாளரை தாக்கிய குற்றச்சாட்டிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாந்த மற்றும் அவரது சகோதரரான ஆராச்சிகட்டு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சமந்த பெரேரா ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களுக்கு நிபந்தனையுடனான பிணையுடன் விடுதலை கொடுக்கப்பட்டது.

காவல் நிலையத்திற்கு வருகை தந்து கையொப்பம் இடுதல் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

எனினும் அவர்கள் நிபந்தனைக்கு அமைவாக செயற்படாமையினால் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.