மண்சரிவு ஏற்படும் அபாயம்
மழையுடன் கூடிய வானிலை தொடரும் பட்சத்தில், எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்மித்த ஒருசில பிரதேசங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
.இந்நிலையில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், தொடர்ச்சியாக மழை பெய்யுமாயின் மக்கள்க வீடுகளை விட்டு வெளியேறுவது பாதுகாப்பாக அமையுயுமெனம் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக, மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான மழையை எதிர்ப்பார்க்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிலிருந்து, பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment