Header Ads



கட்சியின் பதவிகள், ஒரே கும்பலினால் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது - பாலித

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய -30- தினம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து திருப்தி கொள்ள முடியாது. எனினும் கட்சியை பலமாக்குவதற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும்.

கட்சியின் தலைமைப் பதவி முதல் அனைத்து விடயங்களிலும் மாற்றம் எதிர்பார்க்கப்பட்டது.

மக்களின் நிலைப்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கட்சியின் பதவிகள் ஒரே கும்பலினால் பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சீட்டாடும் போது விளையாடுவோர் மாறமாட்டார்கள், சீட்டுகளே மாறும்.

இம்முறை சீட்டுக் கட்டின் சீட்டுக்கள் ஒரே கும்பலின் கைகளுக்குச் சென்றுள்ளது.

கட்சியில் முழு அளவிலான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும், அது தலைமைத்துவ பதவியிலிருந்தே மே;றகொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.