Header Ads



நுவரெலியா அழுகிறது…!


அம்பாறை அடிபட்டபொழுது
எங்கள் இதயப்பாறைகள் வெடித்தன 

தெல்தெனிய தாக்கப்பட்ட பொழுது
எங்கள் உணர்வுகள்
அடிபணிய மறுத்தன !

திகன தெருக்களில்
சிறுபான்மையின சொத்துக்கள் 
தகனம் செய்யப்பட்டபொழுது

கண்டி மாவட்டத்தின் 
புனித வரலாறு
ரத்தக்கண்ணீர் வடித்தது !

அடித்த அடிகளுக்கும் 
இனவாத வெடிகளுக்கும்
கைமாறு செய்ய முடியாமல் 
எங்கள் தேசத்து உல்லாசப்பயணத்துறை
வெதும்பிக்கொண்டிருக்கின்றது ..! 

பாவம் .... 
இன்று
நுவரெலியா அழுகிறது !

("இள நெஞ்சன்" முர்ஷிதீன் –மாளிகாவத்தை)

2 comments:

  1. புதுமையான சிந்தனை... இரசித்தோம்... சிந்தித்தோம்... மனம் நெகிழ்ந்து போனோம்.... இன்னும் பல உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி இளநெஞ்சன் - முர்ஸீதீன்.

    ReplyDelete
  2. இவ்வாறான பதிவுகளை தவிர்த்தல் நலம்.ஒரு முகநூல் செய்தி மூலம் நு.எளியவில் பெரும்பான்மைக்கு சனம் நிறையவே சேர்க்கலாம். 70% அவர்கள். நல்லெண்ணம் கொள்ளுவோம்

    ReplyDelete

Powered by Blogger.