நுவரெலியா அழுகிறது…!
எங்கள் இதயப்பாறைகள் வெடித்தன
தெல்தெனிய தாக்கப்பட்ட பொழுது
எங்கள் உணர்வுகள்
அடிபணிய மறுத்தன !
திகன தெருக்களில்
சிறுபான்மையின சொத்துக்கள்
தகனம் செய்யப்பட்டபொழுது
கண்டி மாவட்டத்தின்
புனித வரலாறு
ரத்தக்கண்ணீர் வடித்தது !
அடித்த அடிகளுக்கும்
இனவாத வெடிகளுக்கும்
கைமாறு செய்ய முடியாமல்
எங்கள் தேசத்து உல்லாசப்பயணத்துறை
வெதும்பிக்கொண்டிருக்கின்றது ..!
பாவம் ....
இன்று
நுவரெலியா அழுகிறது !
("இள நெஞ்சன்" முர்ஷிதீன் –மாளிகாவத்தை)
புதுமையான சிந்தனை... இரசித்தோம்... சிந்தித்தோம்... மனம் நெகிழ்ந்து போனோம்.... இன்னும் பல உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் மிக்க நன்றி இளநெஞ்சன் - முர்ஸீதீன்.
ReplyDeleteஇவ்வாறான பதிவுகளை தவிர்த்தல் நலம்.ஒரு முகநூல் செய்தி மூலம் நு.எளியவில் பெரும்பான்மைக்கு சனம் நிறையவே சேர்க்கலாம். 70% அவர்கள். நல்லெண்ணம் கொள்ளுவோம்
ReplyDelete