Header Ads



ரணில் பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில், தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில்லை - திலங்க

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில்லை என்பதே தனது நிலைப்பாடு என பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -11- ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு தற்போது தெளிவான ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது இது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நலனுக்காக கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும்.

கட்சியின் மத்திய செயற்குழு இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.