Header Ads



"ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய, போட்டியிட்டால் மண் கவ்வுவார்"

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுவார் என்றால் அவரை இலகுவாக தோற்கடிக்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டால், அவரே தோற்கடிக்க கூடிய வேட்பாளராக இருப்பார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு சிறுபான்மையினர் எவரும் வாக்களிக்க மாட்டார்கள். சிங்கள வாக்குகள் மாத்திரமே அவருக்கு கிடைக்கும்.

இதனால், அவரை இலகுவாக தோற்டிக்க முடியும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்

5 comments:

  1. "இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு."
    (அல்குர்ஆன் : 2:114)

    யாரெல்லாம் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை அழிப்பதற்கு காரணமாய் இருந்தார்களோ அவர்களெல்லாம் இழிவை அடைவர்.

    இழிவடைந்தவர்களை இந்நாட்டின் தலைவர்களாகக் கொள்ள - என்ன?  இழிவடைந்தவர்களா இந்நாட்டு மக்கள்?

    ReplyDelete
  2. If you want to defeat Gotabaya in the next presidential election, UNP should do a lot of hard work to win the heart of the people. Last 3 years during Yahalanaya, UNP has done nothing to the people.

    ReplyDelete
  3. பாஸி அவர்களே நீங்கள் தானே தற்போதைய இழிவான ஆட்சியை தெரிந்தெடுத்தீர்கள். உங்களை இழிவு கவ்வியதை அனுபவித்தும் மேலும் அனுபவித்தும் கொண்டு உள்ளீர்கள் அல்லவா?

    ReplyDelete
  4. @ Hanas

    இழிந்த ஆட்சியாளர்களின்
    இரண்டாந்தர  ஆட்சிகளை
    இனியும் பொறுக்க முடியாது

    அதனால்தான் சொல்கிறோம்
    அனுர திஸாநாயக்க நம்
    அடுத்த தலைவராகட்டும்

    அனைத்தினங்களையும்
    அரவணைத்துச் செல்ல
    அவரே அதி பொருத்தம்

    இலங்கையர் நாமிணைந்து
    இலங்கையின் விடிவுக்காக
    இனியொரு விதி படைப்போம்

    ReplyDelete
  5. 10:85 فَقَالُوْا عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ۚ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏ 
    10:85. "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!'' என்று அவர்கள் கூறினர்.

    ReplyDelete

Powered by Blogger.