காலியாகும் அமைச்சு, பிரதியமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளவர்கள் யார்யார்..?
இராஜினாமா செய்யவுள்ள அமைச்சர்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளுக்கே வழங்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 அமைச்சர்கள் நேற்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவ்வாறு பதவி விலகும் அமைச்சர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளை சுதந்திரக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய நிலையில் ராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர்களாக இருக்கும் நபர்களுக்கு முழு அமைச்சுப் பதவியும், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் நபர்களுக்கு பிரதியமைச்சு அல்லது ராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
Post a Comment