Header Ads



ஆசிபா கொலை, சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் ஆதிகாரி ஷர்மாவின் பேட்டியின் சிறுபகுதி

ஆசிஃபா வன்புணர்வு கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் ஆதிகாரியான திருமதி ஷ்வேதாம்பரி ஷர்மாவின் பேட்டியின் சிறுபகுதி...

குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பிராமணர்களாக இருக்கிறார்கள்.

நாமெல்லாம் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள், ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணின் வன்புணர்வு கொலையில்...

நமது பிராமணர்களை குற்றவாளிகளாக காட்டக்கூடாதென பல வழிகளில் 
எனக்கு அழுத்தம் கொடுத்தார்கள்.

ஒரு போலீஸ் அதிகாரி என்ற முறையில் நான் அவர்களிடம் சொன்னேன்...
எனக்கு மதமில்லை, என்னுடைய ஒரே மதம் எனது போலீஸ் யூனிபார்ம் தான் என்று.

அவர்களது எல்லா தந்திரங்களும் எங்களிடம் எடுபடாததால், அவர்களது குடும்பத்தார்களும், ஆதரவாளர்களும் மிரட்டவும் அச்சுறுத்தவும் செய்தார்கள்.
கம்புகளை எடுத்து வந்தார்கள். பயங்கரமாக கோஷமிட்டார்கள்.

மூவர்ணக்கொடியோடு ஊர்வலங்கள் நடத்தினார்கள். பல கிராமங்களுக்கான சாலைகளை அடைத்தார்கள்.

கடைசியில் நீதிமன்றத்தையும் மறித்தார்கள்.

ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கறிஞர்கள் கும்பலாக கோஷமிட்டு மிரட்டி அச்சுறுத்தினார்கள்.

நீதிமன்றத்திற்கு வெளியேயும் அச்சுறுத்தும் கும்பல்கள் நிறைந்திருக்கும்.

சில காவல்துறையினரும் குற்றவாளிகளுக்காவே இருந்தார்கள்.

ஒருவிதமான சட்டமற்ற தன்மையையும் பீதியையும் நிறைத்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அமைதியாகவும் உறுதியாகவும், அர்ப்பணிப்புணர்வோடு எங்கள் பணிகளை தொடர்ந்தோம்.

நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைத்து விதமான ஆதரங்களோடும் சாட்சிகளோடும் எங்களது விசாரணை நிறைவடைந்துள்ளதால் நீதி நிலைக்குமென நம்புகிறோம்...

- திருமதி. ஷ்வேதாம்பரி ஷர்மா அவர்களின் பேட்டியின் சிறுபகுதி இது...

2 comments:

Powered by Blogger.