Header Ads



50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்

உடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 50 பேரடங்கிய சிங்களக் காடையர் கூட்டம் குடுகல பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீங்கள் முஸ்லிம்களா எனக் கேட்டே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த 2 முஸ்லிம்கள் தற்போது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் குறித்த 2 முஸ்லிம்கள் பயணித்த ஆட்டோவுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

1 comment:

  1. காடையர் என்ற சொல் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லையை கொடுக்கும் நபர்களை பொதுவாக குறிப்பிடும் ஆனால் இந்த சம்பவத்துக்கு சின்ஹல இனத்துவேசக்கார சொல்லையே தான் பயன்படுத்தவேண்டும்.எது எப்படியோ கடுமையான சட்டத்தை நடைமுறைபடுத்தினால் இத்தகைய குற்றத்தை தடுக்கமுடியும்.

    ReplyDelete

Powered by Blogger.