Header Ads



கண்டி வன்முறை - முக்கிய 2 அதிகாரிகள் விரைவில் கைது..??

கண்டி - தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் நடந்த இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவரும், பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைது செய்யப்பட உள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சம்பவங்கள் தொடர்பான சகல விசாரணைகளையும் பொலிஸ்மா அதிபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் மூன்று விசாரணைக்குழுக்கள் வன்முறைகள் நடந்த பிரதேசங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களில் தகவல்களை பெற்றுள்ளனர்.

கிடைத்துள்ள இந்த தகவல்களின் அடிப்படையில், அடுத்த கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தகவல்கள் கூறுகின்றன.

கைது செய்யப்பட உள்ள சார்ஜன்ட் மேஜர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் வன்முறைகள் வழிநடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இடங்களில் தங்கியிருந்தாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

1 comment:

Powered by Blogger.