Header Ads



24 மணித்தியாலங்களில் 10147 சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போக்குவரத்து சட்டங்களை மீறிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய பத்தாயிரத்து 147 சாரதிகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸார் தயாராகி உள்ளனர்.

நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே பத்தாயிரத்து 147 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த சந்தர்ப்பங்களில் 233 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக விபத்துக்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டியமையினால் ஏற்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. Buddhist Country Buddhist Holy Drinks Results. Only Cutting animal very Bad Buddhist country law....

    ReplyDelete

Powered by Blogger.