20 ஆவது திருத்தச் சட்டத்தை, உயிர் தியாகம் செய்தாவது தோற்கடிப்போம்
13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தும் நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை கொண்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -26- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டம் மூலம் நாட்டை பிளவுப்படுத்த மாட்டார்கள். எனினும் சர்வதேச தலையீட்டுடன் நாட்டை பிளவுப்படுத்துவார்கள்.
முடிந்தால், 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரட்டும். தேசிய சுதந்திர முன்னணி உயிர் தியாகம் செய்தாவது அதனை தோற்கடிக்கும்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்கும் வகையில் முதல் நடவடிக்கையாக எதிர்வரும் 3 ஆம் திகதி நாடு முழுவதும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் ஜயந்த சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment