Header Ads



16ம் திகதி வரை இடியுடன் மழை - தொலைபேசி, மின் உபகரண பாவனையை தவிர்க்கவும்

நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மலையக பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பதிவாகக் கூடும் என்றும். இடியுடன் கூடிய மழையின் போது 70 அல்லது 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்களைப் பாவிப்பதை தவிர்க்குமாறும், மிதி வண்டி உழவு இயந்திரம் மற்றும் படகுகளில் செலுத்துவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கடும் காற்று காரணமாக மின்கம்பங்கள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதனால் பொது மக்களை அவதானமாக செயற்படுமாறும், அவரச நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.