Header Ads



VPN பயன்படுத்திய, இலங்கையர்களுக்கு ஆபத்து

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரவுகளுக்கமைய எட்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இவ்வாறு VPN பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு VPN பயன்படுத்தியமையினால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக அசேல தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள VPN செயலியை (App) அழித்து விடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.