Header Ads



புதிய பொலிஸ் மா அதிபராக, SM விக்ரமசிங்க

மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, புதிய பொலிஸ் மா அதிபரான நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி திகன பிரதேசத்தில் நடந்த இனவாத வன்முறை கட்டுப்படுத்த மேற்கொண்ட சேவையை கவனத்தில் கொண்டு இந்த நியமனத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட உள்ள எஸ்.எம்.விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர் எனவும் பேசப்படுகிறது.

No comments

Powered by Blogger.