Header Ads



காத்தான்குடியில் குண்டுகளும், ISIS ஸ்ரீ லங்கா என எழுதப்பட்ட பதாதையும் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த குண்டுகள் காணப்பட்ட வீடுகளுக்கு முன்னால், “ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா” என எழுதப்பட்ட பதாதையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 comments:

  1. They keep plotting all the way to justify their attack on Muslims.

    ReplyDelete
  2. தமிழ் பயங்கரவாதிகள் தங்கட இழி குணத்தை காட்டுகிறார்கள்

    ReplyDelete
  3. @GT X உங்கள் கருத்துக்களை நான் தொடர்ந்து அவதானித்து வந்து இருக்கிறது. சகல கருத்துக்களும் இனதுவேசத்துடன், தமிழர்களுக்கு எதிரானவையாக இருந்து இருக்கிறது.

    இதை யார் செய்தார்கள் என்று அறிய முன்னரே தமிழர் என்ற முடிவுக்கு வந்துவிட்டிர்கள். ஆக உங்கள் மனதில் இருக்கும் அந்த தீய நோக்கம் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    யார் செய்தார்கள் என்பதை விசாரிக்க போலீஸ் இருக்கிறது. தண்டனை கொடுக்க நீதிமன்றம் இருக்கிறது. அதைவிட்டு உங்களை போல உங்கள் கேவலமான வார்த்தைகளால் பிற சமூகத்தை பேசுவதுதான் உங்கள் நாகரிகம் ?

    அந்த அமித், ஞானசார தேரர் போன்ற குழப்பவாதிகள் போவே நீங்களும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. உங்களை போல எல்லா சமூகத்தில் இருக்கும் சிலரால் நாடு இந்த கெதியில் இருக்கிறது.

    எண்ணம் போலவே வாழ்வும். திருந்துங்க ப்ரோ

    ReplyDelete
  4. @Gtx, முஸ்லிம் பயங்கரவாதிகள் என்னுமா திருந்தவில்லை?

    ReplyDelete
  5. ISIS மற்றும்
    பயங்கரவாத கும்பல்
    எப்போதும் இஸ்லாமிற்கு எதிரானது
    அவர்கள் எப்படி இஸ்லாமிற்கு ஆதரவு கொடுப்பார்கள்
    தயவு செய்து think pannunka செய்வதற்கு முன்.
    இது உங்கள் நேரம் ஆனால்
    பரிசுத்த குரான் ஒருபோதும் மாறாது.


    ReplyDelete
  6. Sure arranged by SENAAS/ POLICE/ STF
    cz they need proof for their arrest of yesterday in Kalmunai & Batticalo area
    Our people should be carefull in all single areas

    ReplyDelete

Powered by Blogger.