Header Ads



மின்சார பட்டியலை பரிசோதனைசெய்யச், சென்றவர்கள் செய்த அசிங்கம்

அம்பலங்கொடயில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி மின்சார பட்டியலை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி குறித்த பெண்ணின் வீட்டிற்கு இரண்டு நபர்கள் சென்றுள்ளனர்.

அங்கு குறித்த இருவரும் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர். நீர் கொண்டு வருவதற்காக வீட்டினுள் சென்ற பெண்ணிடம் கூர்மையான ஆயுதம் ஒன்றை காட்டி அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய மறைந்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த சந்தேக நபர்கள் இருவரும் 29 மற்றும் 30 வயதுடையவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இரண்டு சந்தேகநபர்களும் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றுவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.