Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், என்ன செய்யப் போகிறார்கள்..?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது,முஸ்லிம் அரசியல் வாதிகள்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக செயல்படுவார்களாக இருந்தால்,அது, இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான அதிகரங்களை தன்னகத்தே கொண்டிருந்தும், கட்டுப்படுத்தாத பிரதமர் ரணிலை குற்றமற்றவராக பொருள்படச் செய்யும் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் முஸ்லிம் எம்பி க்கள் வாக்களிப்பது தொடர்பில் அவரிடம். வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்...

இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாரளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இதன் போது, இலங்கை மக்கள் சில ஆச்சரியத்தக்க வகையிலான முடிவுகளை கண்டு கொள்ள முடியும் என நம்புகிறேன். பல கட்சிகளையும் சேர்ந்த அரசியல் வாதிகள் தாமாகவே முன் வந்து, எமது பிரேரணைக்கு ஆதரவு தரவுள்ளதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும், இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள் எவ்வாறு செயற்பட போகிறார்கள் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

இலங்கையில் என்றுமில்லாதவாறு முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகள் அதிகரித்துள்ளன. இலங்கை அரசு, இந்த வன் முறைகளை கட்டுப்படுத்த போதியளவு நடவைக்கை எடுக்கவில்லை. கண்டி, அம்பாறை சம்பவங்கள் நடைபெறும் போது, ரணில் பிரதமர் எனும் பாரிய அதிகாரத்துக்கு மேலதிகமாக சட்ட ஒழுங்கு அமைச்சையும் வைத்திருந்தார். இது போன்ற கலவரங்களை கட்டுப்படுத்த இன்னுமென்ன அதிகாரங்கள் வேண்டும். வேறு யாராவது சட்ட ஒழுங்கு அமைச்சை வைத்திருந்தால், தான் நினைத்ததை செய்ய முடியாதென, அவர், அதனை தன் கையில் வைத்திருந்தாரோ தெரியவில்லை. அப்படியும் சிந்திக்கக் கூடியவர் தான்.

இறுதியில் இக் கலவரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னணியில் சர்வதேச அழுத்தங்கள் இருந்தன. இன்னும் ஒரு சில தினங்களில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வரவுள்ளது. இதனை சர்வதேசமும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது. இதன் போதான ஒவ்வொரு விடயங்களும் அணு, அணுவாக ஆராயப்படும். இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகள், அமைச்சு போன்ற சுக போகங்களை முன் நிறுத்தி,  பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவார்களாக இருந்தால், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவாத செயற்பாடுகளில், பிரதமர் ரணில் எந்த வித குற்றமும் அற்றவர் என்ற சான்றிதழை, முஸ்லிம் அரசியல் வாதிகளை வழங்கியதாக அமைந்து விடும்.

ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள், பாராளுமன்றத்தில் வீராப்புடன், சமூக தியாகிகள் போன்று  குரல் கொடுத்துவிட்டு, ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் சென்று, ஜனாதிபதியை குற்றமற்றவராக காட்டி இருந்தனர். இது போன்ற செயற்பாடுகள் இன்னுமின்னும் தொடர்ந்தால், இவ்வரசினர் முஸ்லிம்களை இன்னுமின்னும் அடக்கி, ஒடுக்கி ஆள்வார்கள் என்பதில் ஐயமில்லை என அவர் குறிப்பிட்டார்.

5 comments:

  1. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
    (அல்குர்ஆன் : 2:286)

    ReplyDelete
  2. Namal is talking nuts. The no-confidence motion is based on other matters and not on Ranils failure to control the violence on the Muslims. So there is no compulsion on the Muslim MPs to support the motion because of the violence. Besides there is more evidence coming out to say that it his party that was behind the violence. Did they do it for political gains.

    ReplyDelete
  3. நாமலின் கேள்வி “மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது” போன்றது. நாட்டின் நடைமுறை கூடவா தெரியாமல் இருக்கிறார்?

    (1) “யார் ஆட்சி” மாறினாலும் முஸ்லிம் வன்முறைகள் தொடர்பான அரசின் கொள்கை ஒன்று தான், அது மாறவே மாறாது.
    (2) அதே போல், வாக்களிப்பது தொடர்பான 21 முஸ்லிம் MP களின் கொள்கையும் ஒன்று தான். அது மாறவே மாறாது. (சுயநலன்- பணம்/பதவி/இலவச வெளிநாட்டு பயணங்கள்).

    ReplyDelete
  4. "The Muslim Voice" believes what MP Namal Rajapaksa has siad is correct. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
    Noor Nizam.
    Convener "The Muslim Voice".

    ReplyDelete
  5. அரசியலுக்கு எந்தத்தகுதியும் இல்லாதவர்கள் அரசியலில் நுழைந்திருப்பது மக்களுக்கும் நாட்டுக்கும் பெரிய ஆபத்து என்பதை விளங்கி அனைவரும் அதற்கு ஏற்றவகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.