Header Ads



சுவிஸ் + ஐரோப்பா வாழ் இலங்கை, முஸ்லிம்களுக்கான அழைப்பு


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக, பௌத்த இன வன்முறையாளர்கள் மேற்கொண்ட  இனவெறித் தாக்குதலையும்,  அடக்குமுறைகளையும் கண்டித்து, ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் (EIMF) ஏற்பாடு செய்துள்ள மாபெரும் போராட்டத்திற்கான அழைப்பு இது.

சுவிசர்லாந்திலும், ஐரோப்பா வாழ் தேசங்களிலும் வாழும் எமது முஸ்லிம் உறவுகளே..!

உலக நாடுகளால் மனித உரிமை காவலர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள, ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு முன், நாம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இலங்கை உறவுகளுக்காக முன்னெடுக்கவுள்ளோம்.

முஸ்லிம்களாகிய நாம் இப்போராட்டத்தில் எமது குடும்பத்தினர் சகிதம் பங்கேற்று, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவான எமது குரலை, முழு உலகிலும் பரவச்செய்து, எமது உறவுகள்  இனவன்முறைக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகிறது.

அந்தவகையில்,

இனவாதப் பேய்களை விரட்டு
இன வன்முறையாளர்களை அடக்கு, 
பௌத்தசிங்கள காடையர் கூட்டத்தை ஒடுக்கு, 

நல்லாட்சி அரசே,

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டு,
வன்முறை குற்றவாளிகளுக்கு விலங்கிடு,
முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்க வழிவிடு,

ஆகிய கோசங்களை முன்மொழிந்து, பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்

திரண்டு வாரீர், ஆதரவு தாரீர்


இடம் - ஜெனீவா ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு முன்

நேரம் - 12.00 - 17.00

காலம் - 19.03.2018

தொடர்புகளுக்கு

HANEEF 0041 78 889 03 36
AMEER 0041 78 633 13 35
FIRDOWS 0041 79555 53 54

2 comments:

  1. காலத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ற மிகவும் சரியான ஏற்பாடுகள். சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று அதன் இலக்கைச் சிறப்பாக அடைந்து கொள்ள எமது பிராத்தனைகளும் வாழ்த்துக்களும் அதனை ஏற்பாடு செய்த சகோதரர்களுக்கும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் உரித்தாகட்டும்.அல்லாஹ் உங்கள் அனைவரின் நல்ல செயல்களை அங்கீகரித்து மறுமையில் எத்தகைய குறைபாடுகளும் இன்றி உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. Our sincere gratitudes to EIMF.
    May Allah make it successful.

    ReplyDelete

Powered by Blogger.