சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலில் நடந்த, ஜும்ஆ தொழுகை (படங்கள்)
-Abdul Azeez-
அம்பாறையில் பௌத்த சிங்கள இனவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பள்ளிவாசலில் இன்று (02) ஜும்ஆ தொழுகை நடைபெற்றுள்ளது.
சுமார் 100 பேரளவில் இதில் பங்கேற்றுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.
பல அரச ஊழியர்கள் இந்தவார ஜும்ஆ தொழுகையை அம்பாறை பள்ளிவாசலில் தொழுவதைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் தொழுதுகொண்டனர்.
இலங்கை முஸ்லிம்களின் வாழ்வும் சாவும் இந்தத் தாய் மண்ணில்தான். பௌத்தத்தின் பெயர் கூறி மேற்கொள்ளும் இவ்வகைப் பயங்கரவாதச் செயற்பாடுகளை கட்சி பேதங்களுக்கு அப்பால் நின்று தைரியமாக எதிர்கொள்வோம்.
ReplyDelete