Header Ads



மஹிந்த கையெழுத்திடவில்லை - ரணிலுக்கு எதிரான பிரேரணை கருவிடம் ஒப்படைப்பு

ஒன்றிணைந்த எதிரணியால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையானது சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று -21- கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் 52பேர் கையெழுத்திட்டுள்ள நிலையில், மஹிந்தவின் கையெழுத்து இதற்கு அவசியமில்லை என்று ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.