Header Ads



முஸ்லிம்களுக்கு கூட்டுத், தலைமைத்துவம் அவசியம் - சம்பிக்க ரணவக்க உபதேசம்


(மொஹமட் அன்ஸிர்)

கிறிஸ்த்தவ சமூகம் சிறந்த முறையில், வழிநடத்தப்டுவதாகவும் அதுபோன்று முஸ்லிம் சமூகமும் சிறந்த முறையில் வழிநடத்தப்பட வேண்டுமெனவும், இதற்கு முஸ்லிம்களிடையே கூட்டுத் தலைமைத்துவம் அவசியமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையிலான குழுவினருக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. அமைச்சர் சம்பிக்கவின் வீட்டில் நடைபெற்றுள்ள இச்சந்திப்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது,

சமூக மட்டத்திலான அல்லது  தேசிய ரிதியிலான பிரச்சினைகள் எழுகிற போது அதில் தலையீடு செய்து நிலைமையை சமூகமாக்கும் ஒரு சூழ்நிலை கிறிஸ்த்தவ சமூகத்தில் காணப்படுகிறது. ஆனால் அதேநிலையை முஸ்லிம் சமூகத்தில் காலமுடியவில்லை. இந்நிலை மாற்றப்பட வேண்டுமாயின் முஸ்லிம்களிடையே கூட்டுத் தலைமைத்துவம் அல்லது பலமான தலைமைத்துவம் அவசியமாகிறது.

மேலும் கண்டி வன்முறை சம்பவத்துடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. மகிந்த ராஜபக்ஸ தரப்பினரே எனக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். அதில் உண்மையில்லை.

எனினும் நான் தற்போதுள்ள அமைச்சின் மூலம் கொழும்பிலுள்ள முஸ்லிம்களுக்கு அதிக வீடுகளை வழங்கியுள்ளேன். இதுபற்றிய யாரும் அறியாதுள்ளனர். கிரன்ட்பாஸில் பள்ளிவாசலுக்கு என 5 பேர்ச்சச் காணி வழங்குவதாக உறுதியளித்தேன். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

இச்சந்திப்பில் ஜம்மியத்துல் உலமா, சூறா கவுன்சில் உள்ளிட்ட மற்றும் பல முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.


3 comments:

  1. All is well...but what is the reality now...
    Is this problem created by Muslims...or your co-motivated senaas?
    What is the big problem in Muslim community...
    We have the pure guide of Al-Quraan, so no need to talk about it..

    Just try to prove you are involved in Kandy criminal act or not...!

    ReplyDelete
  2. Well said Bazeer Mohamed.

    முஸ்லிம்கள் எந்த ஒரு கணத்திலும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயட்பட்டவர்களும் இல்லை அப்படி செயட்பட போகின்றவர்களும் இல்லை. முஸ்லிம்கள் எந்த ஒரு சிங்களவருக்கும் எதிராகவோ, புத்த மதத்துக்கு எதிராகவோ செயட்பட்டதும் இல்லை. அப்படி இருக்கும் போது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் அனைத்து இனரீதியான வன்முறைகளும் நடந்தேறி உள்ளது. அதட்கு பதில் அளிக்க வேண்டியவர், முஸ்லிமகளின் காதில் பூகுத்த முனைகிறார். இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். எங்களுக்கும் இவர்மாதிரி கதைக்க முடியும். பெளத்தர்களும் ஒரு தலைமையிலோ அல்லது கூட்டு தலைமையிலே ஓன்று படுமாறு எங்களால் கேட்கமுடியும் ஆனால் நாம் அப்படி கேட்க மாட்டோம். இவருக்கு இந்த நாட்டை ஆட்சி செய்வதட்கு மிகப் பெரும் ஆசை உண்டு. அதனால் இப்படியான முயட்சியில் ஈடு படுகிறார். நாம் மிகவும் புத்தியுடன் நடந்தால் இவரினால் ஏட்படும் பாதகமான விடயங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளமுடியும்.

    ReplyDelete
  3. சம்பிக்கையின் கபட நாடகத்தினை நம்பும் எமது முட்டாள்கள் இருக்கும் வரை அவர்கள் எமது பொருளாதாரத்தினை மட்டுமல்ல எமது உயிரினையும் காவு கொள்ளும் படலமும் நடந்தேறும் என்பதில் சந்தேகமில்லை

    ReplyDelete

Powered by Blogger.