"பொலிஸில் முறையிட்டு, ஆவணங்களை பெற்றுக் கொள்ளுங்கள்"
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த சில தினங்களாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் சேதங்களுக்குள்ளாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், மத்ரஸாக்களின் சேத விபரங்களைக் குறிப்பிட்டு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபை பள்ளிவாசல்கள் மற்றும் தக்கியாக்களின் நிர்வாகங்களைக் கோரியுள்ளது.
அத்தோடு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள மற்றும் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் தொடர்பிலும் அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக முறைப்பாடுகளைச் செய்யுமாறு பொதுமக்களை வேண்டியுள்ளது.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளார். அவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள திகன, கென்கல்ல மற்றும் அளுத்வத்த பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொலிஸார் தாக்குதல் சம்பவம், தீவைப்பு சம்பவம் பற்றிய விபரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம் கட்டாயமாக தங்களது சொத்துக்களின் சேதவிபரங்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொலிஸில் முறைப்பாடுகளைப் பதிவு செய்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்டஈடுகளை எதுவித சிரமங்களுமின்றி பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு முஸ்லிம்கள் தமது காணி உறுதிகள், வாகனங்களின் பதிவு மற்றும் உரிமை ஆவணங்கள், காப்புறுதி ஆவணங்கள், வங்கிகளின் ஆவணங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளின் ஆவணங்களை பாதுகாப்பான இடங்களில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை கோரியுள்ளது.
தயவுசெய்து முறைப்பாட்டின் போது பாதிப்பை ஏற்படுத்தியது இனந்தெரியாத நபர்கள் எனக் குறிப்பிட வேண்டாம்
ReplyDeleteMentioned that it was attacked by Hon.PM Ranil and His Ex. My3's men.
ReplyDelete