Header Ads



ஆபாசப் படங்களைக் காட்டிய சாரதி, கல்லால் தாக்கிய மாணவிகளின் துணிகரம்

(எம்.ஏ.எம்.ஹசனார்)

பாட­சா­லையை விட்டு வரும் வழியில் மாண­வி­களை இலக்கு வைத்து ஆபாசப் படங்­களைக் காட்­டினார் என்ற குற்­றச்­சாட்டில் சாரதி ஓரு­வரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

தெஹி­யத்­த­கண்டி பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாண­விகள் பாட­சாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த போது இரு மாண­வி­க­ளுக்கு ஆபாசப் படம் காண்­பித்­தமை தொடர்பில் கிடைத்த முறைப்­பாட்டின் பேரி­லேயே இவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இந்தப் பிர­தே­சத்தில் சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் வீட்டுப் பாவனை பொருட்­களை விற்­பனை செய்து வரும் இவர், சம்பவ தினம் மாண­விகள் இரு­வ­ரையும் லொறி அருகில் அழைத்து தனது கைய­டக்கத் தொலை­பே­சியில் இருந்த ஆபாசப் படங்­களைக் காண்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த மாண­விகள் கூக்­கு­ர­லிட்டு கல்­லெ­றிந்து தாக்­கி­ய­தா­கவும் பின்னர் வீட்­டுக்கு வந்த மாண­விகள் பெற்­றோ­ரிடம் நடந்­த­வற்றைக் கூறி தாம் குறித்து வைத்­தி­ருந்த லொறியின் இலக்­கத்தை கொடுத்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து பொலிஸில் செய்­யப்­பட்­ட­மு­றைப்­பாட்­டை­ய­டுத்து 21 வய­தான சார­தியை சந்­தே­கத்தில் கைது செய்த பொலிஸார், மஹி­யங்­கன நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது நீதவான் வீரசிங்க இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.