ஆபாசப் படங்களைக் காட்டிய சாரதி, கல்லால் தாக்கிய மாணவிகளின் துணிகரம்
(எம்.ஏ.எம்.ஹசனார்)
பாடசாலையை விட்டு வரும் வழியில் மாணவிகளை இலக்கு வைத்து ஆபாசப் படங்களைக் காட்டினார் என்ற குற்றச்சாட்டில் சாரதி ஓருவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவிகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரு மாணவிகளுக்கு ஆபாசப் படம் காண்பித்தமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பிரதேசத்தில் சிறிய ரக லொறி ஒன்றின் மூலம் வீட்டுப் பாவனை பொருட்களை விற்பனை செய்து வரும் இவர், சம்பவ தினம் மாணவிகள் இருவரையும் லொறி அருகில் அழைத்து தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் கூக்குரலிட்டு கல்லெறிந்து தாக்கியதாகவும் பின்னர் வீட்டுக்கு வந்த மாணவிகள் பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி தாம் குறித்து வைத்திருந்த லொறியின் இலக்கத்தை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸில் செய்யப்பட்டமுறைப்பாட்டையடுத்து 21 வயதான சாரதியை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், மஹியங்கன நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் வீரசிங்க இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment