மூட்டை மூட்டையாக கற்களைக் கொண்டுவந்து, முஸ்லீம்களின் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கல்வீச்சு
திகணவிற்கு அருகில் இருக்கும் கெங்கல்ல என்ற பிரதேசத்தில் மூட்டை மூட்டையாக கற்களைக் கொண்டு வந்து முஸ்லீம்களின் வீடுகளுக்கும், கடைகளுக்கும் கல்வீச்சு நடைபெறுவதாகச் செய்திகள் கிடைக்கின்றன.
நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை சம்பவத்தை நிருப்பிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது. இதனைக் காரணமாக வைத்தே பொலீசார் மிகவும் பராமுகமாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொள்கின்றனர். சிசிடிவீ கெமெராக்கள் திட்டமிட்டு உடைக்கப்பட்டு திருடப்படுகின்றன.
தயவு செய்து சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் இருப்பவர்கள் சம்பவங்களை மொபைல் போனினூடாக வீடியோ செய்யுங்கள்.பாதிப்புகளை இழைப்பவர்களின் முகங்களை zoom செய்து முடியுமானால் புகைப்படம் எடுங்கள்.அதுமே தவறு செய்பவர்களைக் கைது செய்வதற்கு மிகவும் உதவி செய்யும்.
சிறு சிறு வீடியோக்களாக எடுத்து உடனே பகிர்ந்து விடுங்கள்.திடீரென உங்கள் போன்கள் உடைக்கப்பட்டால் அல்லது பறிக்கப்பட்ட நீங்கள் சேகரித்து வைத்திருகும் ஆதாரங்களும் அழிந்து போகும்.
உங்கள் ஆதாரங்களை குரல்கள் இயக்கத்தின் Voices Movement ன் முகனூல பக்கத்தின் ஊடாக அல்லது vmove2017@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பு வையுங்கள்.ஆவணப்படுத்துவதற்கும்,அறிக்கைகள் தயாரிப்பதற்கும் மற்றும் முறைப்பாடுகள் செய்வதற்கும் அவை எமக்கு உதவி புரியும்.
Mohamad Ajwar Jee
Post a Comment