Header Ads



எல்லை மீள்நிர்ணயங்களை, ஏற்றுக்கொள்ள முடியாது - ஹக்கீம்

மாகாண சபைத் தேர்தல் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம் குறித்த அறிக்கையின் அடிப்படையில், சிறுபான்மை கட்சிகளின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவடையும் அச்சுறுத்தல் நிலவுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்தநிலையில் அரசாங்கம் மாகாண சபைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கைகளை அரசாங்கம் மீளாய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அளவையீட்டாளர் நாயகம் கணகரத்தினம் தவலிங்கம் தலைமையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு, மாகாண சபை எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் அறிக்கையை அண்மையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி மன்றங்கள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிடம் கையளித்தது.

இந்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எல்லை மீள்நிர்ணய விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறிக்கை எல்லைமீள்நிர்ணய விடயமானது, சிறுபான்மை அரசியல் பிரதிநித்துவத்தை பாதிக்காத வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது.

1 comment:

  1. It has been defined and designed in regards of welfare of overall ppl in Srilanka not only the muslim community.so all muslims should come forward to accept and acknowledge the new provincial determination

    ReplyDelete

Powered by Blogger.