Header Ads



பர­ப­ரப்­பான சூழலில், கூடு­கி­றது பாரா­ளு­மன்றம்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக கூட்டு எதி­ரணி கொண்டு வரவிருக்கும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  குறித்த பேச்­சுக்கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்ற பர­ப­ரப்­பான சூழலில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது.

பாரா­ளு­மன்றம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நாளை  பிற்­பகல் 1 மணிக்கு கூட­வுள்­ளது. பெரும்­பாலும் நாளை செவ்­வாய்­க்கி­ழமை நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் இலங்கை அர­சி­யலில் பெரும் நெருக்­க­டி­யான நிலை தோன்­றி­யுள்­ளது. இதன்­படி ஆரம்­பத்தில் தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது தொடர்பில் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்ட போது  தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம் என ஐக்­கிய தேசியக் கட்சி சார்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்­பாக அதன் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீ­ரவும் சென்ற பாரா­ளு­மன்ற கூட்­டத்­தொ­டரின் போது கூட்­டாக தெரி­வித்­தனர்.

அதன்­பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு விட­யத்­திலும் அமைச்­ச­ரவை மாற்­றத்­திலும் அதி­ருப்தி கொண்டு அக்­கட்­சிக்குள் பெரும் உட்­பூசல் எழுந்­துள்­ளது. இந்­நி­லையில் இரா­ஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரப்­போ­வ­தாக அறி­வித்தார். இந்­நி­லையில் கூட்டு எதி­ரணி பிர­த­ம­ருக்கு எதி­ரா­கவும் அர­சாங்­கத்­திற்ெகதி­ரா­கவும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர திட்­ட­மிட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.   இப் பிரே­ர­ணைக்கு ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் ஒரு சிலரும் ஆத­ரவு நல்கப் போவ­தாக அர­சியல் வட்­டா­ரங்­களிலிருந்து வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

இதன்­படி நாளை மார்ச் மாதத்­திற்­கான பாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இவ்­வாரம் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளிக்­க­வுள்­ள­தாக கூட்டு எதி­ரணி தெரி­வித்­துள்­ளது.  பெரும்­பாலும் நாளை செவ்­வா­ய்க்­கி­ழமை நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதி­ரணி கைய­ளிக்கக் கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான பரப்­பான சூழலில் நாளை பாரா­ளு­மன்ற அமர்­வுகள் ஆரம்­ப­மா­க­வுள்­ளன. 

ஆகவே இவ்­வார பாரா­ளு­மன்ற அமர்வு அர­சியல் நெருக்கடிக்கு மத்தியில் பெரும் பரபரப்பாக அமையக்கூடும் என எதிர் பார்க்கப்படுகின்றது. அதேபோன்று அம்பாறை பள்ளிவாசல் மற் றும் முஸ்லிம் உணவகங்கள் மீதான தாக்குதல் தொடர்பிலும் நாளை ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் அவதானத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.