Header Ads



புதிய தேர்தல் முறையால், பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது - மகிந்த

உள்ளூராட்சி சபைத் தேர்தல், புதிய தேர்தல் முறைமைக்கு அமைய நடத்தப்பட்டதன் மூலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

குறுகிய காலத்தில் துரிதமாக தேர்தல் முறையில் திருத்தங்கள் செய்தமை இந்த நெருக்கடிக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவுடன் போட்டியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றிருந்தாலும் அவற்றில் ஆட்சியமைக்க முடியாத நிலையை எதிர்நோக்கி வருகிறது.

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.