Header Ads



இன்றும் ஒரு, மாணவி உயிரிழப்பு

புஸ்ஸசல்லாவ - உடகம அடபோகே பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் நடன பயிற்சி அறையின் அருகாமையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இன்று -02- மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாணவி கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

15 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் கம்பளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சம்பவம் குறித்து புஸ்ஸலாவ காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.