Header Ads



இனஒற்றுமையை சிதைத்த, இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

இனஒற்றுமையை சிதைக்கும் கருத்துக்களை பதிவிட்ட முன்னாள் இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

முகப்புத்தகத்தில் இனஒற்றுமையை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கம்பஹாவைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று -20- குற்ற விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு எதிரான விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான குறித்த சந்தேநபரை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.