திகன - அம்பாறையில் ஏற்பட்ட கதி, முழு நாட்டிலும் ஏற்படலாம் - டக்ளஸ்
தமிழ் அரசியல் கைதிகளைப் பாரத்து ‘இவர்கள் பெரும் புலிகள், இவர்களை விடுதலை செய்யக் கூடாது’ என கூக்குரலிடும் தென்பகுதி பேரினவாதிகளுக்கு பயந்தே அரசு தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பில் வீண் காலதாமதங்களை ஏற்படுத்தி வருகின்றது என்றால், அது வேதனைக்குரிய விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று -21- கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,
இனவாதக் குழுக்களின் குரலுக்கு எடுபட்டுப் போனதால் அண்மையில் அம்பாறை மற்றும் திகன போன்ற பகுதிகளில் ஏற்பட்ட கதிக்கே இந்த நாடு முழுமையாக ஆட்படக்கூடும் என்ற விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இனவாதத்தையும், மத வாதத்தையும் தூண்டுவோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு, சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஓர் ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டுமென சுயாதீன ஆணைக்குழுக்களை இந்த அரசு அமைக்க முற்பட்ட காலத்திலேயே நாம் வலியுறுத்தியிருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment