அரைகுறை ஆடை விளம்பரங்களை, அரசாங்கம் தடை செய்யவேண்டும் - காத்தான்குடியில் தீர்மானம்
அரை குறை ஆடையணிந்த பெண்களின் விளம்பரங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்றுகூடலின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்று கூடல் வைபவத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அதனை மகளிர் விவகார அமைச்சுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற இந்த மகளிர்தின ஒன்றுகூடலில் இந்தப் பிரகடனத்தை உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வளமான ஒரு பெண்ணை சமூகத்தில் உருவாக்குகின்ற செயற்பாட்டை செய்வதற்கு ஏற்ற வகையில் சட்டங்களை சீரமைத்து இவ்வாறான விளம்பரங்களின் ஊடாக பொது இடங்களில் பெண்களின் தரத்தைக் குறைக்கின்ற செயற்பாடுகளை நிறுத்துவதற்கு சட்டங்களை ஆக்க வேண்டுமென காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மகளிர் தின ஒன்றுகூடல் வைபவத்தில் இங்கு கலந்து கொண்டுள்ள பெண்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம். இந்தச் செயற்பாட்டை மகளிர் விவகார அமைச்சு மேற்கொள்வதுடன் அதற்காக இந்தத் தீர்மானத்தை எமது காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக இதனை நாங்கள் மகளிர் விவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கின்றோம்.
சர்வதேச ரீதியாக இன்று சிரியாவில் நடைபெறும் யுத்தத்தில் சுமார் 4 வருடங்களாக பெண்கள், சிறுவர்கள் உட்பட பொது மக்கள் கொல்லப்பட்டுவருவதுடன் மனித அவலங்கள் அங்கு இடம்பெற்று வருகின்றன. சர்வதேச யுத்த தர்மத்தை மீறி பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், மதப் போதகர்கள் எனப் பலரும் கொல்லப்படுகின்றனர்.
இவைகளை நிறுத்துவதுடன் பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக நடக் கும் இந்தக் கொடுமைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இதில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பு தலையிட வேண்டும் எனவும் இந்த மகளிர் ஒன்றுகூடலில் நாம் தீர்மா னமாக நிறைவேற்றுகின்றோம் என அவர் தெரிவித்தார்.
naanga maatranukku maarkam sollama
ReplyDeleteNAANGA MUDAHALIL NAMMA MAARKATHAI PIN PATRUWOUM
ALLAH DA KAAWAL ,NAMMA NAADU IRUKKURA IRUPPUKKU IDU WERA,
PUTTHISAALITHANAMA NADAPPOOM
Is this news that much importance at this moment?
ReplyDeleteமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
ReplyDelete(அல்குர்ஆன் : 3:110)
www.tamililquran.com