Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகள், வெளியிடவுள்ள முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் நாட்டு மக்களுக்கு தமது நிலைப்பாட்டை வெளியிட உள்ளனர்.

தற்போது நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த 21 பேரும் கூட்டாக இணைந்து தெளிவுபடுத்த உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைக் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இன்றைய தினம் அல்லது நாளைய தினத்தில் கூட்டி நாட்டு மக்களுக்கு தங்களது நிலைப்பாட்டை முஸ்லிம் உறுப்பினர்கள் வெளியிட உள்ளனர்.

கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு, இந்த சம்பவங்களின் போது அரசாங்கம் எடுத்த முடிவுகள், அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எதிர்கால செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 comments:

  1. எல்லாம் ஏமாற்று வித்தை..இவனுகள் ஏதாவது பொய் காரணங்களை சொல்லி
    தம் பதவிகளை தக்கவைக்க நம்மை முட்டாள்கள் ஆக்க ஆடும் நாடகம்.

    ReplyDelete
  2. காலம் கடந்தாவது ஞானம் பிறக்கிறதா என்று பார்ப்போம்.

    ReplyDelete
  3. ஒன்றும் நடக்காது... அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்... இதுதான் சுருக்கம்..

    ReplyDelete
  4. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் கிருபை செய்வானாக.

    ReplyDelete
  5. எதை செய்தாலும் குற்றம்பிடிக்கும் பாசிசவாதிகளால்தான் பிரச்சினைகள் மென்மேலும் அதிகரிக்கின்றது. அவர்கள் முஸ்லிம்களை மேய்பார் அற்ற மந்தைகளாக்கி ஓநாய்களுக்கு இரையாக்கவே முயற்சிக்கின்றனர். இந்த வீரர்களின் தெ◌ாள்ளைதான் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  6. முதலில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுப்பதை நிறுத்தி விட்டு அதன் பின்பு எதிர்காலம் பற்றி கதைக்கலாம்.

    ReplyDelete
  7. God bless them be unity in the future.be forget our differences.let us together all sri lankan.UNITY WILL BRING THE HELP OF ALLAH.IF WE DEVIDE ALLAH WON'T HELP ANYMORE.MAY ALLAH GOOD SIGN IN FIRST TIME

    ReplyDelete
  8. First of all confirm that you all are together atleast in this issue.May Allah Guide you all.

    ReplyDelete
  9. இனிமேல் நீங்கள் எடுக்கப்போகும் முடிவு அது ஒரு திடகாத்திரமானதும் முன்மாதிரியுமானதாக இருக்கவேண்டும். வெறுமனே பூச்சான்றி காட்றதாக அமையக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.