Header Ads



கிளி பிடித்து தருவதாககூறி காட்டுக்கு அழைத்துசென்று, வன்புணர்ந்து கொல்லப்பட்ட சிறுவன்

சிலாபம் - இரணவில பிரதேசத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைதீவு - நாயாறு பகுதியில் மறைந்திருந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சிலாபம் - இரணவில – முவபிட்டிய பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

கொலை செய்த அன்றே அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கிளியொன்றை பிடித்து தருவதாக கூறி வனப்பகுதிக்கு அழைத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் சிறுவனை கொலை செய்ததாக அந்த சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

சந்தேக நபரிடம் மேலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

2 comments:

  1. YA ALLAH POOR BOY THE PERSON WHO DID THIS SHOULD BE HANGED

    ReplyDelete
  2. awane kutraththa oppukkondal innum ennappa visarana

    ReplyDelete

Powered by Blogger.