ரணிலுக்கு எதிரான பிரேணையின், வெற்றி மைத்திரியின் கரங்களில் - மஹிந்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரிசனைக்கு அமையவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வெற்றி தோல்வி நிர்ணயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் காண்பிக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே அதன் வெற்றி தீர்மானிக்கப்படும்.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பிலும் சர்ச்சை நிலைமைகள் நிலவி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.
Post a Comment