Header Ads



பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், வழங்கமுன் இதை வாசியுங்கள்

-Assalamu Alaikum-

நிவாரண பணியாளர்களுக்கும், நிவாரணப் பொருட்கள் கொண்டுவருவோருக்குமான பணிவான வேண்டுகோள்

வசதியாகவும் சுய மரியாதையுடனும்,  வாழந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிவாரணபணி செய்கின்றோம் என்று போய் அவர்களின் உள்ளங்களையும் கொழுத்திவிட்டு வந்துவிடாதீர்கள்.

*மென்மையாகவும் அவர்களின் உள்ளம்புண்படாதவாரும் நடந்துகொள்ளுங்கள்.

*போட்டோ எடுத்து அவர்கள் மானத்தை வாங்கிவிடாதீர்கள்.

*குழந்தைகளிடம் நிவாரணபொருட்களை வழங்காதீர்கள்.

* வரிசைப்படுத்தாமல் அவர்களிடமே செல்லுங்கள்.

*உங்கள் பகுதி வீராப்புகளை அவர்களிடம் பேசாதீர்கள்

*அதிகமான உணவுப்பொருட்களை வழங்கி, ஒரு கையேந்தும் சமூகமாக்கிவிடாதீர்கள்

*அவர்கள் மீள்எழுற்சிக்கான  வழிகளை மாத்திரம் திறந்துவிடுங்கள் அவர்களே எழுந்துவிடுவார்கள்.

*அல்லாஹ்வின் பொருத்தத்துக்காக மட்டும் களத்தில் பணியாற்றுங்கள்.

உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

4 comments:

  1. நிலைமைக்கு ஏற்ற பொருத்தமான பணிவான வேண்டுகோள். இதனைப் பின்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதுடன் அல்லாஹ்வின் திருப்தியையும் அடைந்து கொள்ள முயற்சி செய்வோமாக. அல்லாஹ் உங்களுடைய திருப்பணியைப் பொருந்திக் கொள்வானாக.

    ReplyDelete
  2. நல்லதொரு ஆலோசனை

    ReplyDelete
  3. Very true.The people go to affected area should follow this advice

    ReplyDelete

Powered by Blogger.