Header Ads



மாதம்பே நகரின் பாதுகாப்புக்காக, பொலிஸ் குழுக்கள் நியமிப்பு

மாதம்பே பழைய நகரின் பாதுகாப்புக்காக, பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் வந்த 28 வயதான இளைஞர் ஒருவரால், 77 வயதான நபர் ஒருவர் நேற்றைய தினம் (18)  தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, நகரில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.

இதேவேளை, குறித்த 28 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.