Header Ads



வியூகம் அமைக்கும் ரணில்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை நாளை அல்­லது நாளை மறு­தினம்   கூட்டு எதி­ரணி சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக  கூறி­ வ­ரு­கின்ற நிலையில் அதனை எதிர்­கொண்டு  தோற்­க­டிக்­கப்­ப­தற்­கான வியூ­கங்­களை ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க   முன்­னெ­டுத்து வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பல்­வேறு தரப்­பி­ன­ரி­டமும் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றார்.  

நேற்­றைய தினம் அல­ரி­ மா­ளி­கையில் ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்­சியின்   பாரா­ளு­மன்­றக்­கு­ழுவை சந்­தித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க   நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பாக விரி­வாக கலந்­து­ரை­யா­டி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அது­மட்­டு­மன்றி   ஏனைய கட்­சி­க­ளு­டனும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­ கட்­சியின்  உறுப்­பி­னர்கள்  இந் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் போது எவ்­வ­கை­யான தீர்­மா­னத்தை எடுக்­கப்­போ­கின்­றார்கள் என இது­வ­ரையில் உறு­தி­யாக அறி­விக்­கப்­ப­டாத நிலையில் அவர்­களின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ளும்  நோக்கில் காய்­களை நகர்த்தி வரு­கின்­றது. 

அது­மட்­டு­மன்றி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­திக்­க­வுள்ள பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு   கோர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  மேலும்  தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பும்  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்கும் என ஐக்­கிய தேசி­யக்­கட்சி நம்­பு­கின்­றது. 

எவ்­வா­றெ­­னினும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு ஐக்­கி­ய­ தே­சி­யக் ­கட்சி எதிர்­பார்க்­கின்­றது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை  சமர்ப்­பிக்­கப் ­போ­வ­தாக கூட்டு எதி­ரணி   தெரி­வித்து வரு­கின்ற நிலையில் தேசிய அர­சி­யலில் மீண்டும் பர­ப­ரப்­பான நிலை  ஏற்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற  உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  வெற்றியீட்டியதை அடுத்தே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. 

No comments

Powered by Blogger.