Header Ads



வீதி கடவையில் படுத்து, பாராளுமன்ற உறுப்பினர் ஆர்ப்பாட்டம்


கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே வீதி கடவையில்  படுத்து இன்று (10) ஆர்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளார்.

நாவலபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை  இடமாற்றம் செய்யக்கோரியே 10.03.2018 காலை5 மணிமுதல் இவ்வார்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது 

கண்டி அட்டன் பிரதான வீதியின் நாவலபிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள மஞ்சள் கடவையில்  படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையில் இடம்பெற்று வருவதாக நவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

ஆர்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை  மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும்  நீதியை சரியாக கடைபிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்பாட்டத்தை தொடரப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.

2 comments:

  1. இவர்தான் நேர்மையான மக்களின் நேர்மையான அரசியல் பிரதிநிதி அவரூக்கு வாக்களித்த மக்களின் நலன்க ருதி செயற்படும் மனிதாபி.வாழ்க உனது போராட்டம் .

    ReplyDelete
  2. இவர்தான் நேர்மையான மக்களின் நேர்மையான அரசியல் பிரதிநிதி அவரூக்கு வாக்களித்த மக்களின் நலன்க ருதி செயற்படும் மனிதாபி.வாழ்க உனது போராட்டம் .

    ReplyDelete

Powered by Blogger.