"முஸ்லீம் அரசியல்வாதிகள், இதனையே செய்கின்றனர்" - குமார் குணரட்னம்
இனவாத மதவாத மோதல்கள், வன்செயல்கள் மூலம் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் பொது எதிரி அவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டிருப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் செயலாளர் குமார் குணரட்னம் கூறுகிறார். தற்போதுள்ள முறுகல் நிலைமை தொடர்பாக ” திவயின” ஞாயிறு பத்திரிகை அவரை தொடர்பு கொண்ட வேளை அவர் இவ்வாறு தெரிவித்தார். கீழே வருவது அவருடனான நேர்காணல் ஆகும்
கேள்வி : நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கலவர நிலைமையை முன்னிலை சோஷலிஸக் கட்சி எவ்வாறு பார்க்கிறது. ?
பதில் : நாட்டின் பொது முற்போக்கு மக்கள் நினைப்பது போலவே எம்மிலும் இது தொடர்பாக பெரிய அதிர்ச்சி காணப்படுகிறது. இந்த பிரச்சினையை உடனடியாக தீர்க்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் இருக்கிறோம் . இது முற்றுமுழுதாக இனவாதத்தை அடிப்படியாகக்கொண்டது. எமது நாட்டில் இனவாதமானது காலத்திற்குக்காலம் அந்தந்த அரசியல் கட்சிகளின் தேவைக்கு ஏற்ப வளர்த்து விடப்படும் சூழ்நிலை காணப்படுகிறது.
கேள்வி : நீங்கள் குறிப்பிட்டீர்கள் இது இனவாத பிரச்சினை என்று . ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு இனத்தவரை இனவாதிகள் என்று குற்றம்சாட்டிக் கொண்டுள்ளனர்.
பதில் : இங்கு பல்வேறு வெளியீடுகள் உள்ளன . சிங்கள இனவாதம் உண்டு , தமிழ் இனவாதம் உண்டு,முஸ்லீம் இனவாதம் உண்டு. சுருக்கமாக கூறுவதானால் இனவாதம் என்ற நிலை எந்த நிலைமையில் எடுத்தாலும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். இதனால் உண்மையான எதிரி மறைக்கப்பட்டு ,போலியான எதிரியுடன் போராடும் நிலமையாகவே இதை நாங்கள் காண்கிறோம். ஒன்றாக இணைந்து பொது எதிரிக்கு எதிராக போராடவேண்டும் . ஆனால் பொது மக்கள் போலி எதிரியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள் .
கேள்வி : நீங்கள் கூறும் பொது எதிரி யார்?
பதில் : எமது அரசியல் மொழியில் கூறினால் இந்த முறைமை தான் எதிரி .அதற்கு எதிராக போராடவேண்டிய மக்கள் தங்களுக்குள்ளே அடிபட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த துயர நிமையை நாம் தோற்கடிக்கவேண்டும்
கேள்வி : அதை எவ்வாறு தோற்கடிப்பது.?
பதில்: இங்கு நாம் காணும் முக்கியமான விடயம் ஒன்று உள்ளது. தயவுசெய்து நீங்கள் அதனை பத்திரிகைகளில் பிரசுரியுங்கள் . இனவாதம் ஒருவகையில் புற்றுநோய் போன்றது . அது மக்களின் போராடும் சக்தியை, ஒற்றுமையாக பொது எதிரியை எதிர்க்கும் சக்தியை வலுவிழக்க செய்யும் . அதனால் மக்கள் ஆரோக்கியத்தை இழக்கின்றனர். சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்று இல்லை . அவர்கள் இதனால் பலவீனம் அடைகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளிக்கு பொறுப்பாளிகள் இருக்கும்போது , அவர்களுக்கு எதிராக போராடவேண்டிய பொது மக்கள் தங்களுக்கு எதிராகவே இனவாதத்தினால் நோய்வாய்ப்பட்டுள்ளனர் . அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க பாரிய சமூக இயக்கமொன்றை உருவாக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது. அது உண்மையான எதிரிக்கு எதிரான உண்மையான போராட்டத்தை அணிதிரட்டவே.
கேள்வி : தேசப்பற்றை போலி என்று ஏன் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?
பதில் : உண்மையான தேசப்பற்று என்றால் , அமெரிக்காவின், சர்வதேச நாணய நிதியதின் ,உலக வங்கியின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து நடக்கமாட்டார்கள் தானே? போலியான தேசப்பற்றை காட்டி சிங்கள அரசியல்வாதிகள் சிங்கள மக்களை முட்டாளாக்குகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சிங்கள இனம் நாட்டை ஆட்சி செய்வதால் ஏற்படுவதாக கூறி தமிழ் மக்களை முட்டாளாக்குகின்றனர். முஸ்லீம் அரசியல்வாதிகளும் இதனையே செய்கின்றனர். இது பேச்சளவில் சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து இருக்கும் நிலைமையாகும் . சகல முதலாளித்துவ அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரிவினையை தமது அரசியல் நிலைபேற்றுக்கு பாவித்துக்கொள்கிறார்கள்.
கேள்வி : சகோதரரே ! சிறுபான்மையினர் பெருபான்மையினருக்கு மேலாக செல்கிறார்கள் , பெரும்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆள்கிறார்கள் போன்ற கருத்துக்கள் இருக்கும்போது நீங்கள் கூறும் இந்த விடயத்தை செய்யமுடியுமா?
பதில் : இலங்கையில் பெருபான்மை சிங்களம், சிறுபான்மை தமிழ்,முஸ்லீம் என்று ஒரு பிரச்சினை உள்ளது. அது ஒரு பிரச்சினை அல்ல அது ஒரு நிலைமை .ஆனால் இவர்கள் அனைவரின் நாடு இலங்கை . சகல இன குழுக்களும் நாங்கள் இலங்கையர் என்று நினைக்க வேண்டும். பெரும்பான்மையினர் அவர்கள் பெரும்பான்மை என்பதால் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கும் பொருப்பு அவர்களை சார்ந்தது. சிறுபான்மை இனங்களுக்கு அரசாங்கத்தினால் எதாவது அநீதிகள் இழைக்கப் படுமானால் பெருமான்மை சிங்கள உழைக்கும் மக்கள் அதற்காக அணிதிரள வேண்டும். அவ்விடத்தில் இயல்பாகவே தமிழ் முஸ்லீம் இனங்களிடையே இருக்கு சந்தேகம் அற்றுப்போகும் . அவர்களின் இனவாதம் ஏற்படுவது சந்தேகத்தினை ஆகும். இங்கே பிரச்சினை இருப்பது சிங்கள ஆட்சியாளர்கள் இருப்பதனால் அல்ல . முதலாளித்துவ அரசாங்கம் இருப்பதனால் தான் என்று உணரவேண்டும். இது சிங்கள ஆட்சியாளர்களின் பிரச்சினை அல்ல , முதலாளித்துவ ஆட்சியாளர்களினால் ஏற்பட்ட பிரச்சினையாகும். சம்பந்தனுக்கு, ரணிலுக்கு. மைத்திரிக்கு , ராஜபக்சவுக்கு பொருளாதார கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை . அவர்கள் அவ்விடத்தில் ஒன்று தான் . அவர்கள் நவ லிபரல்வாதத்திற்கு நிபந்தனையின்றி கை உயர்த்துகிறார் .சிங்களவர்கள் , தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் உரிமைக்காக முன்னிற்பார்களானால், அவர்களும் சிங்களவர்களோடு ஒன்றாக போராட்டத்தில் இணைவார்கள். இதில் தான் உண்மையான ஒற்றுமையை கட்டியெழுப்பமுடியும். மேல்மாடியில் முதலாளித்துவ வர்க்கத்தினர் ஒற்றுமையாக அழகாக வாழ்கிறார்கள். இனவாத தீயில் பொதுமக்கள் கருகிப்போகவேன்டாம். இனவாதத்தால் அழிந்துபோவோமா ? இல்லை ஒன்றாக போராடி வெல்வோமா ? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
கேள்வி : ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் செய்ட் ரஹத் அல் ஹுசைன் இளவரசர் அவர்கள் இலங்கையில் சிறுபான்மை இனங்கள் மீது அடிக்கடி நடாத்தப்படும் வன்முறைகளுக்கு காரணம் வகை கூறல் மற்றும் நல்லிணக்க கடமைகளை அமுல்படுத்தாமை என்று அறிவித்துள்ளார்.
பதில் : ஐக்கிய அமெரிக்கா மற்றும் அவர்களுக்கு வேண்டப்பட்ட நாடுகளின் கைபொம்மையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கு தெளிவானதொரு நிகழ்ச்சி நிரல் உண்டு .அவர்களுக்கு தமது அதிகார பலத்தை விஸ்தரிப்பதற்காக உலகத்தை பகிர்ந்துகொள்ளும் அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உண்டு. அவர்கள் உலகின் பல்வேறு வலயங்களில் இந்த போட்டியில் ஈடுபட்டுள்ளனர். நாம் இருக்கும் இந்த வலயமும் இந்த யுத்தத்தின் ஒரு வலயமாகும். அது இலங்கை அரசாங்கங்களை பாதிக்கிறது. அதனால் தான் அவர்கள் இந்த பிரச்சினையை கொண்டுவருகிறார்கள். அவர்கள் இந்த பிரச்சினையில் தலையிடுவது எமது நாட்டு மக்கள் மீது கொண்டுள்ள அன்பு காரணமாக அல்ல. அவர்கள் முன்வைக்கும் தீர்வுகளில் எமக்கு நம்பிக்கை இல்லை . தீர்வு இருப்பது இந்த உழைக்கும் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் கைகளில் மட்டுமே.+
புகை படம். திமுத்து பிரேமரத்ன
கலந்துரையாடியது – சிரிமன்ன ரத்ன சேகர
Post a Comment