Header Ads



வீதியில் கண்டெடுத்த பணத்தை, பொலிஸாரிடம் ஒப்படைத்த மாணவன்

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் மாணவர் ஒருவர் வீதியில் கண்டெடுத்த ஒரு இலட்சம் ரூபா பணத்தை பொலிஸாரைத் தேடிச்சென்று ஒப்படைத்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த மாணவன் வீதியில் கிடந்த பணப் பொதி ஒன்றினை எடுத்து வீதிக்கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

திருக்கோவில் தம்பிலுவில் தேசிய பாடசாலையில், தரம் 8இல் கல்வி கற்கும் ஹயானன் என்ற சிறுவனே குறித்த பொதியினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாணவன் கண்டெடுத்த பொதியில், ஒரு இலட்சம் ரூபா பணம், வங்கிப்புத்தகம் மற்றும் அடையாள அட்டை என்பன காணப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து பணப் பொதியை உரியவர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்ததோடு, இந்த மாணவனை போல அனைவரும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என தெரிவித்து, மாணவனையும் பாராட்டியுள்ளனர்.


3 comments:

  1. கற்றதை கடைபிடித்திருக்கும் இந்த சிறுவனில் ஏனைய சிறுவர்களுக்கும் படிப்பினை இருக்கிறது. இதை சிறுவர்களுக்கு பெற்றோர் எத்தி வையுங்கள்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சிறுவரே

    ReplyDelete
  3. நமது நாட்டில் பெரும் பொறுப்புகளில் இருப்பவர்களிடத்தில் கூட நேர்மை கிடையாதிருக்கும் நிலையில், உன் நேர்மையை மெச்சினேன் தம்பி!

    ReplyDelete

Powered by Blogger.