இலங்கை முஸ்லிம்களுக்காக, ஜப்பானில் போராட்டம் (படங்கள்)
டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்திற்கு முன்பாக இலங்கையின் தற்போதைய நிலவரத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் வாழ் இலங்கையர்கள் பதாதைகளை ஏந்திய வண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து கடந்த நான்கு தினங்களாக இடம்பெற்றுவரும் இனவாத வன்முறை காரணமாக நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு பெருமளவிலான பொலிஸார், விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment