Header Ads



இனவாத வன்முறைகள் தொடர்பில், குமார் சங்ககார

இலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அன்பு, நம்பிக்கை மற்றும் அரவணைப்பு இலங்கையின் பொது பயன்படாக இருக்க வேண்டும். இனவாதம் மற்றும் வன்முறைகளுக்கு இடம் கிடையாது. வன்முறைகளை கைவிட்டு அனைவரும் வலுவாக ஒன்றிணைய வேண்டும் எனவும் சங்ககார கோரியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.