வினோத சம்பவத்திற்கு, முகம்கொடுத்த பெண்
புஸ்ஸலாவ பிரதேசத்தில் பெண் ஒருவர் வினோத சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.
இந்த பெண், கடையில் இருந்து 6000 ரூபாய்க்கு கொள்வனவு செய்து வந்த பொருட்களை வீடு முழுவதும் திருடர்கள் வீசி சென்றுள்ளதனை அவதானித்துள்ளார்.
கடைக்கு சென்று பொருட்கள் கொள்வனவு செய்த பினனர் அதனை வீட்டினுள் வைத்து விட்டு அருகில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுளளார்.
பின்னர் வீடு திரும்பிய போது வீடு முழுவதும் தான் கொள்வனவு செய்த பொருட்கள் வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த செயலை தனது வீட்டிற்குள் புகுந்த திருடன் செய்துள்ளதாக குறித்த பெண் எண்ணியுள்ளார். பின்னர் கோபத்துடன் திருடனை தேட அவர் ஆரம்பித்துள்ளார்.
கோபமாக இருந்த பெண் திருடர்களை பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்குள் புகுந்தது திருடர்கள் அல்ல குரங்குகள் என தெரியவந்துள்ளதுடன், அவர் கொள்வனவு செய்த கோதுமைமா முழுவதையும் குரங்குகள் தலையில் கொட்டி கொண்டுள்ளதாக குறித்த பெண் தெரிவி்த்துள்ளார்.
Post a Comment