Header Ads



முச்சக்கரவண்டியுடன் நபரொருவர், தீ வைத்து கொலை

தனமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியுடன் நபரொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிலத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றதாக சந்தேக நபர்கள் காவல்துறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

ஒரு சந்தேக நபர் நேற்று முன்தினம் காவல்துறையில் சரணடைந்த நிலையில், ஏனைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் தனமல்வில பிரதேசத்தை சேர்ந்த 52 வயதான நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.