இலங்கையில் தீவிரமான குற்றம் - பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிக்கை
பிரிட்டன் அரசின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் விடுமுறை நாட்களில், வெளிநாட்டுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை விளக்கியுள்ளது.
இலங்கை
புத்த புகைப்படங்களை அவமரியாதை செய்வது இலங்கையில் தீவிரமான குற்றமாகும். புத்தர் சிலைக்கு முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பிரிட்டன் சுற்றுலா பயணியான நவோமி கோல்மன், புத்தர் படத்தை பச்சை குத்தி இருந்ததற்காகக் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் நாடு கடத்தப்பட்டார்.
Post a Comment