அலரி மாளிகைக்கு வந்த, அம்பாறை விவகாரம்
ஒவ்வொரு வாரமும், அலரிமாளிகையில், வியாழக்கிழமைகளில் பல்வேறான சந்திப்புகள், கூட்டங்கள், கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்கள், கட்சியின் சட்ட ஆலோசகர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்திப்புகளென பல்வேறான சந்திப்புகள் இடம்பெறும்.
எனினும், நேற்று (01) போயா தினம் என்பதனால், மேலே குறிப்பிட்ட சந்திப்புகள், கலந்துரையாடல்கள் யாவும், புதன்கிழமையே இடம்பெற்றன. ஆகையால், அன்றையதினம் அலரிமாளிகை, என்றுமில்லாவாறு மிகவும் பரபரப்பாக இயங்கியது.
அங்கு இடம்பெற்ற சந்திப்புகளின் போது, இனப்பெருக்கத் தடை மாத்திரை கதை, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவி வழங்காமை, மினி அமைச்சரவை மாற்றத்தின் உள்நோக்கம் உள்ளிட்ட விவகாரங்களே அலசப்பட்டன.
“அம்பாறையில் இனப்பெருக்கத் தடை மாத்திரை கதையின் பின்னணி என்னவென, அமைச்சர் தயா கமகேயிடம் வினவிய, அமைச்சர் வஜிர அபேவர்தன, நாட்டை தீக்கிறையாக்கவதற்காக, அந்த மாகாணத்தில் “மொட்டுக்காரர்கள்” மேற்கொண்ட, சேறுபூசும் நடவடிக்கையாகுமென, தகவல் கசிந்துள்ளது என்றார்.
“உணவு, உடைகளில் போடக்கூடிய வகையிலான, இனப்பெருக்கத் தடை மாத்திரை என்றொரு வகை, உலகில் எங்குமே இல்லையென, உலகிலுள்ள மிகவும் பிரபல்யமான வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று பதிலளித்த அமைச்சர் தயா கமகே, சிலர் பொய்களை பரப்பிவிட்டு, நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்” என்றும் தெரிவித்துள்ளார்.
“சாப்பாட்டுக்குள் மாத்திரை இருந்ததாம். என்றாலும் அந்த மாத்திரை இனப்பெருக்கத் தடை மாத்திரையென உறுதிப்படுத்தப்படவில்லை. சந்தர்ப்பவாதிகள் இவ்வாறான இல்லாததை கூறி, குறுகிய அரசியல் இலாபத்தை தேடிக்கொள்வதற்கு முயல்கின்றனர் என்றும் எடுத்தியம்பி அமைச்சர் தயா கமகே, சிங்களவர்களின் இனப்பெருக்கத்துக்கு தடைச்செய்வதற்கு யாராவது முயல்வார்களாயின், அதுபோன்றதொரு நகைச்சுவை, ஒன்றுமே இல்லையென பதிலளித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறுகளின் பின்னர், பிரதமர் பதவி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பல்வேறான கதைகள் கட்டப்பட்டதுடன் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட, அவையாவும் குளிருக்குள் மறைந்துவிட்டது
எனினும், இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, ஆனமடுவையில் வைத்து, குளவி கூட்டுக்கு மீண்டும் கல்லெறிந்துவிட்டாரென, அங்கிருந்தவர்களில் ஒருவர் தெரிவித்துவிட்டார்.
இதனைக்கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் கெக்கென்று சிரித்துவிட்டனர். அதில் என்ன வேட்டிக்கையென்றால், “பிரதமர் சரியாகவோ அல்லது முறைக்கேடாகவோ அந்தப் பதவியிலிருந்து விலக்கப்படவேண்டுமென” இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார கூறியதுதான், விசித்திரமானதாகும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
மேலேயும் கீழேயும் நெருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமையானது அவரின், தலைமைத்துவத்தை மென்மேலும் மெருகூற்றியுள்ளதென, இன்னும் சிலர் தெரிவித்துள்ளனர்.
“ ஐக்கிய தேசியக் கட்சியான நாம், அமைச்சரவையில் மாற்றம் செய்துவிட்டோம். எனினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிதான் ஒத்திவைத்துவிட்டது. சரியென்றால், இரண்டையும் ஒன்றோடு ஒன்றாக செய்துவைத்திருக்கலாம் என்று கருத்துரைத்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, எங்களுடைய பக்கத்தில் மட்டும் மாற்றம் செய்தமை, என்னைப் பொறுத்த வரையில், தனிப்பட்ட ரீதியில் நான் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.
குறுக்கிட்ட அமைச்சர் வஜிர அபேவர்தன, “மாகாண ரீதியில் அமைச்சர்களை நியமிப்பது பெரும் சிரமமாகுமென தெரிகிறது. இந்த திருத்தத்துக்கு, சுத்திரக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தில் செய்யமுடியாத திருத்தம், பின்னர் செய்யவே முடியாமல் போய்விடும். ஐ.தே.க, பலமான கட்சியென்பதனால், அமைச்சரவையில் திருத்தங்களைச் செய்தோம். பலமில்லாத கட்சியொன்றினால், அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்யமுடியாது என்றும் கூறிவிட்டார்.
அந்தக் கதை ஒருபுரமிருக்க, “தன்னுடைய உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுகள் மாற்றப்பட்டது என்னுடைய பிரச்சினைக்காக அல்ல” எனத்தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல. அது மற்றொருவரின் பிரச்சினையால் ஆகும் என்றார்.
இதன்போது அவ்விடத்திருந்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, “சமுர்த்தி விவசாயம் மற்றும் பசளை ஆகியனவற்றுக்கான பிரச்சினைகள் காரணமாகவே, கடந்த தேர்தலில் அரசாங்கம் பின்னடைவைச் சந்தித்தது” என்றார்.
“அதுமட்டுமல்ல, எங்களிடத்திலிருக்கும் திறமைவாய்ந்த மற்றும் கட்சியைச் சேர்ந்த இளம் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கவேண்டும்” என்று அமைச்சரவை தயா கமே ஆலோசனை வழங்கினார். அந்த ஆலோசனையை அங்கிருந்தவர்கள் ஆமோதித்தனர்.
அதுவரையிலும் அமைதியாய் கேட்டக்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “பிரச்சினைகளுக்கு ஒருவாறு தீர்வு கண்டுவிட்டோமென நினைத்துகொண்டு இருக்கமுடியாது. வரவிருக்கின்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு மற்றும் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு மக்கள் உடல் ரீதியில் உணரக்கூடிய மாற்றங்களைச் செய்யவேண்டும். இளம் உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஏனையோருக்கு கூடுதல் பொறுப்புகள் மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும்” என்றார்.
இதன்போதுதான் அங்கிருந்தவர்களின் முகங்களில் புன்முறுவல் பூத்தது.
என்றாலும், தன்னுடைய வாயை வைத்துகொண்டு சும்மாவே இருக்காத அமைச்சர் தயா கமகே, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவியை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்காமையால் மக்கள் சந்தோஷமாக இல்லையென்றார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவியை வழங்கவேண்டுமென்பதில் ஐ.தே.க ஒன்றைக்காலில் நின்கின்றது என்று தெரிவித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க, வெளி சக்திகளே, அந்த அமைச்சுப் பதவியை வழங்கவிடாமல் தடுத்துள்ளன என்று புது கதையொன்றை அவிழ்த்துவிட்டார்.
குறிக்கிட்ட சமிந்த விஜயசிற எம்.பி, “ அந்த அமைச்சின் பொறுப்பை தற்காலிகமாக, பிரதமர் பொறுப்பேற்று, தகுதியான ஒருவருக்கு இரண்டு வாரங்களுக்குள் அப்பதவியை வழங்குவதற்கு தீர்மானித்திருப்பது நல்ல விடயமாகும் எனக் கூறியதுடன் அங்கிருந்தவர்கள் அனைவரும் கலைந்துசென்றுவிட்டனர்.
Post a Comment