Header Ads



எவரும் குழப்பமடையவோ, குதூகலிக்கவோ தேவையில்லை - ஜனாதிபத

கட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று (26) முற்பகல் பொலன்னறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வெற்றி குறித்து உற்சாகத்தில் யார் எப்படி நடந்துகொண்டாலும் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 40 வீதத்திற்கு அதிகமாக பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த தேர்தல் நாடாளுமன்ற தேர்தலாக இருந்திருப்பின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பலம் கிடைத்திருக்காது என்பது அறிக்கைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற போது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் பெறுபேறுகள் குறித்து எவரும் குழப்பமடையவோ, குதூகலிக்கவோ தேவையில்லை என்றும், இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித குறையுமின்றி மேற்கொள்ள கட்சித் தலைவர் என்றவகையில் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

சிறந்த அரசியல் கலாசாரத்திற்கான ஒழுக்கப் பண்பாடுகளுடன் புதிய உறுப்பினர்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி தமது பொறுப்புக்களை மக்களுக்காக உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.