Header Ads



இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி, அரபு நாடுகள் வருத்தம்

இலங்கைக்கு எதிராக, வளைகுடா நாடுகள் ஜெனீவா செல்ல தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு நீதி கோரும் வகையில் வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஜெனீவா மனித உரிமை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை வளைகுடா நாடுகள் முன்வைக்கவுள்ளன.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் தொடர்பில் வளைகுடா நாடுகள் வருத்தம் தெரிவிப்பதாக தங்கள் தூதுவர்கள் ஊடாக இலங்கைக்கு அறிவித்துள்ளன.

அதேவேளை ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு, எதிராக யோசனைக்கு வளைகுடா நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. Inda murayilum thiruppi adkkalam.

    ReplyDelete
  2. நல்ல ஏற்பாடு. இதனைத்தடுக்க பிரதமர் முஸ்லிம் பெயருடையவர்களை அங்கு அனுப்பி தடைசெய்ய முயற்சி செய்யக்கூடும். ஆனால் இதனை இலங்கை முஸ்லிம் சமூக நிறுவனங்கள் கூட்டாக ஆதரிக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.