Header Ads



நாட்டில் எத்தனை ஜனாதிபதிகள்..? கீதாவுக்கு சந்தேகம்

நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றாரா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...

நாட்டின் ஜனாதிபதி பற்றி பேசுவதற்கு சோம்பலாக உள்ளது. நாட்டில் தற்போது ஜனாதிபதி இருக்கின்றாரா என்பதே தெரியவில்லை.முடிந்தால் இந்த அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்திக் காண்பிக்கட்டும்.

நாட்டில் எந்தவொரு அபிவிருத்தியையும் பார்க்க முடியவில்லை, மாறாக நாடு நாளுக்கு நாள் அதள பாதாளத்திற்கு செல்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பலர் என்னுடைய குடியுரிமை பற்றி பேசினாலும், நான் எனது வெளிநாட்டு குடியுரிமையை ரத்து செய்து கொண்டுள்ளேன்.

கள்வர்களை பிடிக்கும் பொறுப்பு பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பிரதமருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டுக்கள் வெளிக்கொணரப்படாது. நாட்டின் சட்டம் ஒழுங்குத்துறைக்கு கடவுளின் துணை மட்டுமே.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை அரசாங்கத்திற்கு புகட்டியிருந்தனர்.எதிர்காலத்திலும் மக்கள் சரியான பாடங்களை இந்த அரசாங்கத்திற்கு புகட்டுவார்கள் என கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.